குவாங்ஜு:
சாலஞ்சர் டென்னிஸ் தொடர் தென்கொரியாவில் நடந்துவருகிறது. இந்த தொடரின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த சசிகுமார் முகுந்த் வெற்றிபெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், போஸ்னியாவின் ஆல்டின் செட்கிச்சை சசிகுமார் எதிர்கொண்டார். முதல் செட்டை சசிகுமார் 6-1 என எளிதாக கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து, 2வது சுற்றில் தன்வசப்படுத்தி, 6-3 எனவும், முடிவில் 6-1, 6-3 நேர்செட்டில் சசிகுமார் முகுந்த் வெற்றிபெற்றார்.