வாக்காளர் பட்டியலில் சசிகலா, இளவரசி பெயர் நீக்கம்!

வாக்காளர் பட்டியலில் சசிகலா, இளவரசி பெயர் நீக்கம்!

சென்னை:

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் இளவரசியின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அவருடைய உறவினரான இளவரசியும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் வசித்து வந்தனர்.

அதனால் அவர்களின் பெயர்கள் சென்னை மாநகராட்சி டிவிஷன் 18ல் இடம்பெற்றிருந்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் இருவரும் சிறை சென்றனர்.

மேலும், ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு நினைவகமாக மாற்றும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சசிகலா, இளவரசி ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் இல்லை என்பதால், தற்போது உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலில் அவர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்