ஜெ., நினைவு நாளில் சசிகலா வீடு இடிப்பு

ஜெ., நினைவு நாளில் சசிகலா வீடு இடிப்பு

தஞ்சை:

ஜெயலலிதா நினைவு நாளிலேயே சசிகலாவின் வீட்டை இடிக்க தஞ்சை மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுக தொண்டர்கள் கறுப்பு உடை அணிந்து அவரின் நினைவிடத்துக்கு பேரணியாக சென்று, அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். தஞ்சை மானம்புச்சாவடி எஸ்பிஜி மிஷன் சாலையில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீடு பாழடைந்து இருப்தாக அந்த பகுதியினர் புகார் அளித்த நிலையில், அதனை இடிக்க மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியுளள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்