அந்நிய செலாவணி வழக்கில் ஆஜராகாத சசிகலா!

அந்நிய செலாவணி வழக்கில் ஆஜராகாத சசிகலா!

சென்னை:

அந்நிய செலாவணி வழக்கில், இன்று காணொலி காட்சி மூலம் சசிகலா ஆஜராகவில்லை.

ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

இந்நிலையில், ஜே.ஜே., டிவிக்கு வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் வாங்கியது தொடர்பான வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அந்த வழக்கில், இன்று காணொலி காட்சி மூலம் ஆஜராகுமாறு சசிகலாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து, அந்த உத்தரவின் நகல் கிடைக்க தாமதமானதால் காணொலி காட்சிக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை, இதனால், சசிகலா ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியது.
பின்னர், இந்த வழக்கு வரும் 28ம் தேதிக்கு நீதிபதி மலர்மதி ஒத்திவைத்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்