ரூ.5க்கு புடவை; ரூ.1க்கு லுங்கி

ரூ.5க்கு புடவை; ரூ.1க்கு லுங்கி

வந்தவாசி:

வந்தவாசி துணிக்கடை ஒன்றில் ரூ.5 க்கு புடவையும், ரூ.1க்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் கடை முன் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள பஜார் சாலையில் சர்கார் சில்க்ஸ் என்ற துணிக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை தனது 51ம் ஆண்டு விழாவை கொண்டாடியது.

இதனையொட்டி, இன்று முதல் 3 நாட்களுக்கு ரூ.5 நாணயத்துக்கு புடவையும், ரூ.1 நாணயத்துக்கு லுங்கியும் விற்பனை செய்யப்படும் என என கடை உரிமையாளர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, அந்த கடையின் முன் ஏராளமான மக்கள் குவிந்ததால், பஜார் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்