சென்னை:
பேருந்து சர்ச்சை காரணமாக பிக்பாஸிலிருந்து போட்டியாளர் சரவணன், திடீரென நிர்வாகத்தினர் வெளியேற்றியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன், கமல் தொகுத்து வழங்கும் போது, போட்டியாளர் சரவணன், தன் இளமை பருவத்தில் பேருந்துகளில் செல்லும்போது பெண்களை உரசுவேன் என தெரிவித்திருந்தார்.
இந்த சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக வெடித்தது. இந்த பேச்சு சம்பந்தமாக சரவணன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டும், தற்போது பிக்பாஸின் நிர்வாகத்தினர் சமாதானமாகததால், திடீரென நேற்று போட்டியிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.