மும்பை:
சிவசேனா கட்சியுடன் தேசியவாத காங்கிரஸ் கட்சி இணையாது என சரத்பவார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சியாக செயல்பட முடிவுசெய்துள்ளோம். சிவசேனாவுடன் தங்கள் கட்சி இணையாது என தெரிவித்தார்.
மேலும், பா.ஜ., சிவசேனா இடையே உடன்பாடு ஏற்பட்டதாகவும், பா.ஜ.,வுடன் இணைந்து விரைவில் ஆட்சி அமையுங்கள் என சிவசேனாவுக்கு சரத்பவார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.