சென்னை:
நடிகர் சந்தானம் நடிப்பில் ஏ1 படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜான்சன் இயக்கி உள்ளார். நாயகியாக தாரா நடித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில் சில காட்சிகள் பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளன.
இதனை தொடர்ந்து ஏ1 படத்தை தடை செய்ய வேண்டும் என போலீசில் புகார் அளித்துள்ளனர்.
ராம ரவிக்குமார் என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் ஏ1 படம் பிராமணர் சமூகத்தினரை இழிவுப்படுத்தி உள்ளதால் படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.