ஹோபார்ட்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்திய வீராங்கனை சானியா மிஸ்ரா மற்றும் நடியா ஜோடி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் சர்வதேச மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்திய வீராங்கனை சானியா மிஸ்ரா மற்றும் உக்ரேனிய வீராங்கனை நடியா ஜோடி இறுதிப்போட்டியில், 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் ஜாங் ஷுய் மற்றும் பெங் ஷுவாய் ஆகியோரை வீழ்த்தி சேம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.