ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே வந்த ரயில்கள்; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!

மதுரை:

மதுரையில் மொழி பிரச்சனை காரணமாக, ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே 2 ரயில்கள் வந்த விவகாரத்தில் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை-செங்கோட்டை பயணிகள் ரயில், நேற்று மாலை தாமதமாக திருமங்கலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. திருமங்களத்திலிருந்து ரயில் புறப்பட்டதும் கேட் கீப்பர் அடுத்த ரயில் நிலையமான கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர், அதே நேரத்தில் எதிர்மார்க்மாக செங்கோட்டை-மதுரை ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது. இதனை அறிந்து, அதிர்ச்சியான அதிகாரிகள், உடனடியாக ரயில்களின் ஓட்டுனர்களுக்கு வாக்கிடாக்கியில் தொடர்புகொண்டு ரயில்களை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தினர்.

இதையடுத்து, 2 ரயில்களும் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் 2 ரயில்களும் புறப்பட்டு சென்றது. இந்த சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்த விசாரணையில், கள்ளிக்குடி நிலைய அதிகாரி தீப்சிங் மீனா, இந்தி மொழியில் தகவலை கூறியதை, தண்டவாளத்தில் இருந்த ஜெயக்குமார் தவறாக புரிந்து கொண்டதால் இச்சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தீப்சிங் மீனா, ஜெயக்குமார் ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்