பேருந்தில் திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட பெண்!

பேருந்தில் திடீரென கழுத்தை அறுத்துக்கொண்ட பெண்!

சேலம்:

மேட்டூர் அருகே ஓடும் பேருந்திலேயே பெண் ஒருவர் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியை சேர்ந்த சந்தானம் அகல்யா தம்பதியரின் மகள் காயத்ரி, இவர் வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவரை 7 ஆண்டுக்குமுன் காதலிலத்து திருமணம் செய்துகொண்டார்

காயத்ரியை அவரது தந்தை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தாய் மட்டும் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை நெத்திமேடு பகுதியில் மருத்துவமனைக்கு செல்ல தனியார் பேருந்தில் வந்த காயத்ரியின் தாய் அகல்யா, தன்னுடைய மகள் வசிக்கும் ஊரின் பெயர் பலகையை பார்த்தவுடன் தன்னுடைய கழுத்தை கத்தியால் அறுத்துக்கொண்டார்.

உடனடியாக அவர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் கொண்டுசெல்லப்பட்டார்.

இதுகுறித்து கருமலை கூடல் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்