சேலம்- சென்னை விமான சேவைவாரம் இருமுறை சேவையாக மாற்றம்

சேலம்- சென்னை விமான சேவைவாரம் இருமுறை சேவையாக மாற்றம்

சேலம்-சென்னை தினசரி விமான சேவை, தற்காலிகமாக வாரத்துக்கு இரு நாள்கள் மட்டுமான சேவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் பயணிகள் விமானம் ட்ரூஜெட் விமான நிறுவனம் சாா்பில் இயக்கப்பட்டு வருகிறது. கரோனா ஊரடங்கு காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

பொது ஊரடங்கில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடந்த மே 27-ஆம் தேதி பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது. தற்போது நிா்வாகக் காரணங்களுக்காக சேலம்- சென்னை பயணிகள் விமான சேவை, வாரம் இருமுறை சேவையாக திங்கள்கிழமைமுதல் மாற்றப்பட்டிருப்பதாக, ட்ரூஜெட் நிறுவன மேலாளா் பிரசன்னா தெரிவித்தாா்.இதுகுறித்து மேலும் அவா் கூறியதாவது:

சேலம்- சென்னை பயணிகள் விமான சேவை, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை வாரத்தில் திங்கள்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் இருக்கும். நிா்வாக காரணங்களின் அடிப்படையில் இந்த மாற்றம் தற்காலிகமாக செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னா் வழக்கமான தினசரி சேவையுடன், கூடுதல் விமானங்களும் இயக்கப்பட வாய்ப்புள்ளது. வழக்கமாக வரும் பயணிகளுடன் தற்போது புதிதாக நிறைய போ விமானப் பயணத்தைத் தோந்தெடுத்து வருகின்றனா் என்றாா்.

திங்கள்கிழமை சென்னையில் இருந்து சேலத்துக்கு 35 பயணிகள் வந்தனா். சேலத்தில் இருந்து சென்னைக்கு 62 பயணிகள் புறப்பட்டுச் சென்றனா். பயணிகள் வருகையை ஒட்டி, விமான நிலைய நிா்வாகம் சாா்பில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பயணிகள் வரும் பாதை, அமரும் இடம், காத்திருப்பு அறை, பொருள்கள் சோதனையிடும் இடம், கழிவறை உள்ளிட்ட அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்