5 கோடி ரூபாய் நிதி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

5 கோடி ரூபாய் நிதி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்

◊தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மேலும் பரவாமல் இருக்க அரசு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நிதியுதவி செய்ய முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். தமிழக அரசின் முதல்வர் நிதிக்கு பலர் நிதி உதவிகளை செய்து வருகின்றனர். திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் நிதி உதவி செய்து வருகின்றனர்.

தற்போது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சக்தி மசாலா நிறுவனம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5 கோடியை வழங்கியுள்ளது.

இதன்படி ஐந்து கோடி ரூபாய்க்கான காசோலையை மற்றும் கடிதத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி க்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அரசு எடுத்துவரும் தடுப்பு நடவடிக்கைகள் சக்தி மசாலா நிறுவனம் சார்பில் நாங்கள் இந்த தொகையை வழங்குகிறோம். இந்த சமூக பொறுப்பில் சக்தி மசாலாவின் சிறிய பங்கு அளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளனர்

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்