பாங்காக்:
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தோல்வியடைந்து வெளியேறினார்.
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் நடைபெற்றுவரும் சர்வதேச பேட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பரிவில் 2வது சுற்றில் இந்திய வீராங்கனை சாயனா நேவால், ஜப்பானின் சயாகா டகாஹஷியை எதிர்கொண்டார்.
சாய்னா நேவால் முதல் செட்டை 21-16 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை 11-21 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் 14-21 என்ற கணக்கில் தோல்வியை தழுவினார்.
மொத்தம் 48 நிமிடங்கள் நீடித்த போட்டியில் சாய்னா நேவால் 21-16, 11-21, 14-21 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.