கர்நாடகாவில் காங்., -ம.ஜ.த.,வுக்கு மாற்றாக புதிய ஆட்சி! சதானந்த கவுடா பேச்சு!!

கர்நாடகாவில் காங்., -ம.ஜ.த.,வுக்கு மாற்றாக புதிய ஆட்சி! சதானந்த கவுடா பேச்சு!!

பெங்களூரு:

கர்நாடகாவில் காங்கிரஸ் மஜத கூட்டணி அரசை நாங்கள் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபடமாட்டோம். இந்த கூட்டணி அரசு தானாகவே கவிழ்ந்தால், புதிய ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்போம் என மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சதானந்த கவுடா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாநிலத்தின் வளர்ச்சிக்காக காங்கிரஸ் ம.ஜ.த., கூட்டணிக்கு நிச்சயம் நாங்கள் ஆதரவு தெரிவிப்போம்.

நாங்கள் ஆட்சியை கவிழ்க்கவும் முயற்சி செய்யமாட்டோம். ஆனால், தானாக ஆட்சி கவிழ்ந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என தெரிவித்தார்.

மேலும், காங்., ம.ஜத., கூட்டணி கவிழும் பட்சத்தில் தனிப்பெரும்பான்மையுடன் மாபெரும கட்சியாக இருக்கும நாங்களே ஆட்சியை முடிவுசெய்யும் இடத்தில் இருக்கிறோம்.
கர்நாடகாவில் 4 அமைச்சர்கள் தேர்தவாகியுள்ளனர். இதனால், மாநிலத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் எங்களால் எளிதில் செய்ய முடியும் என சதானந்தகவுடா தெரிவித்தார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்