மும்பை:
முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டடுல்கருக்கு அளிக்கப்பட்டு வந்த ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பை மகாராஷ்டிரா அரசு திரும்பப்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 45க்கும் மேற்பட்டோருக்கான பாதுகாப்பை சிவசேனா கூட்டணி அரசு தற்போது மாற்றியமைத்துள்ளது. அதன்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இதன்படி போலீஸ்காரர் ஒருவர் அவருடன் 24 மணி நேரமும் பாதுகாப்பில் இருப்பார்.
ஆனால், தற்போது டெண்டுல்கருக்கு வழங்கப்பட்ட ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இனி அவர் வெளியே செல்லும் போது மட்டுமே போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என மா£நில அரசு தெரிவித்துள்ளது.
மேலும், அம்மாநில முதல்வரின் மகனும், சிவசேனா கட்சியின் எம்எல்ஏவுமான ஆதித்ய தாக்கரேவுக்கு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பில் இருந்து அவருக்கு ‘இசட்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுளள்ளது.