புதுடெல்லி:
இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஆலோசகர் குழுவிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் மற்றும் செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
விளையாட்டை மேம்படுத்தும் விதமாக அனைத்து இந்திய விளையாட்டு ஆணையம் நிறுவப்பட்டது. இந்த ஆணையத்தின் ஆலோசகர் குழு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் செயல்படத் தொடங்கியது. இந்த ஆணையத்தின் ஆலோசகர் குழு உறுப்பினர்களின் பதவியகாலம் கடந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு செய்தது.
இதனையடுத்து, குழுவின் 27 உறுப்பினர்களிலிருந்து 18 உறுப்பினர்களாக குறைக்கப்பட்டு, மாநிலங்களவை உறுப்பினரான சச்சின் மற்றும் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் இந்த குழுவிலிருந்து அவர்களிருவரும் விலக்கப்பட்டு, புதிய உறுப்பினர்களாக கிரிக்கெட் வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ஹர்பஜன் சிங் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.