மும்பை:
முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சச்சின் டெண்டுல்கள் மும்பை வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார்.
மகாராஷ்டிரா சட்டசபைக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது வாக்குச்சாவடியான மும்பை நகரின் பந்தராவில் வாக்கை பதிவு செய்தார்.
இவருடன் அவரது மனைவி அஞ்சலி மற்றும் மகன் அர்ஜூன் ஆகியோர் வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.