‘‘தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்’’ இந்திய அணிக்கு சச்சின் கருத்து..!

  • In Sports
  • May 27, 2019
  • 203 Views
‘‘தோல்வியை கண்டு பயப்படாதீர்கள்’’ இந்திய அணிக்கு சச்சின் கருத்து..!

மும்பை:

தோல்வியை கண்டு பயப்படாதீர்கள் என பயிற்ச்சி ஆட்டத்தின் தோல்வி குறித்து சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

உலக்ககோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 30ம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தொடர்ச்சியாக விளையாடி வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியது. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் தோல்வியைத் தழுவியது.

இதுகுறித்து கிரிக்கெட் வீரர் சச்சின் செய்தியாளர்களிடம் பேசுகையில், உலக்கோப்பை தொடர் மாதிரியான பெரிய தொடர்களில் ஒன்று இரண்டு போட்டிகள் நமது கையை விட்டு மீறிச் செல்வது தவிர்க்க முடியாது. என்னை பொறுத்தவரை பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து ஆடுகளங்கள் மற்றும் சூழல் ஆகியவற்றை இந்திய அணி புரிந்துகொள்ள வேண்டம். அதை உலகக்கோப்பை தொடர் முழுவதும் பயன்படுத்த வேண்டும். அதுதான் முக்கியம் எனவும், அதனால் இந்த தோல்வியை கண்டு பயப்படத்தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்