லண்டன்:
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை, ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இணைத்து ஐசிசி பெருமைபடுத்தியுள்ளது.
இதுகுறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் சச்சின் தெரிவிக்கையில், ‘ஹால் ஆப் பேம்’ பட்டியலில் இடம்பெற்றது மகிழ்ச்சியை அளிப்பதாகவும், இதற்காக உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பட்டியலில் தம்முடன் இணைந்த தென்னாப்ரிக்க வீரர் ஆலன் டொனால்டு, ஆஸ்திரேலிய வீரர் கேத்ரின் பிட்ஸ்பேட்ரிக் ஆகியோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.