மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் பயிற்சி அகாடமியை மும்பையில் தொடங்கியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியில் அதிக ரன்கள், அதிக சதம் இப்படி பல்வேறு சாதனை படைத்துள்ளார். இவர், கடந்த 2013ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், மும்பையின் மேற்கு பகுதியில் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை தெ £டங்கியுள்ளார். இதுகுறித்த செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்தான் தமக்கு வாழ்க்கையில் அனைத்தையும் அளித்ததாகவும், அதற்கு பிரதிபலனாக கிரிக்கெட்டுக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அகாடமியை தொடங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.