சபரிமலை நடை நாளை திறப்பு

சபரிமலை நடை நாளை திறப்பு

சபரிமலை:

ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை திறக்கப்படுகிறது.

நாளை மாலை 5 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதரி நடையை திறந்துவைக்கிறார். பின்னர் ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தப்பின், 18ம் படி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அன்று பூஜைகள் எதுவும் இல்லாததால் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நாளை மறுநாள் (18ம் தேதி) அதிகாலை மணிக்கு நடை திறக்கப்படும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய் அபிஷேகத்தை தொடங்கி வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்த, கணபதிஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். தினமும் 7 மணிக்கு படி பூஜை நடைபெறும். வரும் 22ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்