தூத்துக்குடி:
நடிகர் விஜய் பேசிய கருத்துக்கு மட்டும் அதிமுகவில் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று தெரியவில்லை என விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் விஜய் அதிமுக அரசை பற்றி பேசினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு அதிமுக அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் விஜய்க்கு எதிராக கொந்தளித்தனர்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக தூத்துக்குடிக்கு வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம் பெண் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை பற்றி எல்லோருமே பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது மாதிரிதான் விஜயும் பேசினார். ஆனால் இவர் பேசிய கருத்துக்கு மட்டும் அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.