புதுடெல்லி:
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயின் பதவிகாலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே இன்று பதவியேற்றுக்கொண்டார்.
குடியரசு மாளிகையில் நடந்த விழாவில், உச்சநீதிமன்ற 47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.