சிரியா மீது ரஷ்யா குண்டுமழை..! 25 பேர் பரிதாப பலி..!!

சிரியா மீது ரஷ்யா குண்டுமழை..! 25 பேர் பரிதாப பலி..!!

இட்லிப்:

ரஷ்ய விமானப்படை சிரியாவின் இட்லிப் நகர் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக போராடி வரும் பல்வேறு அமைப்புகள் மீது அந்நாட்டு ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மேலும், சிரிய எல்லை பகுதியில் பதுங்கியிருந்து ராணுவம் மீது தாக்குதல் நடத்தும் ஐ.எஸ் பயங்கரவாதிகளை அழிப்பதில் சிரியாவுடன், ஈரான் மற்றும் ரஷ்யா இணைந்துள்ளன.

சிரியாவில் நடந்துவரும் இந்த தாக்குதலால், பொதுமக்கள் பலர் அகதிகளாக துருக்கி நாட்டுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ரஷ்ய விமானப்படை இட்லிப் நகரில் குண்டு மழை பொழிந்தது. பள்ளிகள் மற்றும் மருத்துவமனை கட்டங்கள் மீது நடத்திய இந்த தாக்குதலில் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட 25 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்