யானை தாக்கி மூதாட்டி பலி: முதற்கட்டமாக ரூ.50,000

யானை தாக்கி மூதாட்டி பலி: முதற்கட்டமாக ரூ.50,000

ஒசூர்:

ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்திற்கு முதல் கட்டமாக ஈமச்சடங்கிற்கு 50ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரச வழங்கியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு வனப்பகுதி அருகே இன்று காலை காட்டுயானை விரட்டி தாக்கியதில் மூதாட்டி வெங்கடலட்சுமம்மா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடல் ஒசூர் அரசு மருத்துவமனையில் பிரேதபரிசோதனை செய்யப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக ஈமச்சடங்கிற்காக 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை தமிழக அரசின் சார்பில் வனத்துறையினர் மூதாட்டியின் குடும்பத்தினரிடம் வழங்கினர்.

அடுத்த கட்டமாக 3.50 லட்சம் ரூபாய் மூதாட்டின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட இருக்கிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்