ரூ.500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

ரூ.500 கோடி சொத்து கண்டுபிடிப்பு

சித்தூர்:

ஆந்திராவில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமானவரித்துறை 3ம் நாளாக வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.500 கோடி சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும், கோவர்த்தனபுரத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரொக்கமாக ரூ.44 கோடியும், ரூ.18 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் 88 கிலோ தங்கத்தை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், கணக்கில் காட்டப்படாத ரூ.500 கோடி மதிப்பிலான சொத்துக்களும் வருமான வரித்துறை சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்