ரூ.5 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள்

ரூ.5 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள்

ஒசூர்:

ஒசூர் மாநகராட்சியில் தெருவிளக்குகள் இல்லாமல் அவதிப்பட்ட பகுதிக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகளை மாநகராட்சி ஆணையர் செய்து கொடுத்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, ஜூஜூவாடி பகுதியில் உள்ள உப்கார் சிட்டி பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு தெரு மின்விளக்குகள் எரியாமல் இருந்து வந்தது.

இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் அசோக் ரெட்டி ஆகியோரின் வலியுறுத்தலால் ஒசூர் மாநகராட்சி ஆணையர் உப்கர் லே அவுட் பகுதியில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தெருவிளக்குகளை அமைத்து கொடுத்துள்ளதையடுத்து, அப்பகுதி மக்கள் ஆணையருக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்