ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு

ரூ.3,300 கோடி ஹவாலா மோசடி கண்டுபிடிப்பு

புதுடெல்லி:

ஈரோடு கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.3,300 கோடி ஹவாலா பணப்பரிமாற்றம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, ஆக்ரா, டில்லி, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட 42 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் ரூ.3,300 கோடி மதிப்பு ஹவாலா மோசடி நடந்துள்ள தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4.19 கோடி பணம் மற்றும் ரூ.3.2 கோடி மதிப்பு நகைகள் பறிமுதல் செய்துள்ளதாக வருமானவரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்