சென்னை:
சென்னை கொரட்டூரில் போலீஸ் என்கவுண்டரில் ரவுடி மணிகண்டன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
கொரட்டூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில், ரவுடி மணிகண்டனை பிடிக்க விழுப்புரம் போலீசார் முயன்ற போது என்கவுண்டர் நடத்தப்பட்டது.
போலீசார் மீது ரவுடி கத்தியால் தாக்க முயன்றபோது சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, 3 முறை துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.