அரிவாளால் கேக் வெட்டிய ரவுடிகள் கைது

அரிவாளால் கேக் வெட்டிய ரவுடிகள் கைது

கோவை:

கோவையில் கத்தி, அரிவாளால் கேக் வெட்டிய 2 ரவுடிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் ரவுடிகள் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரண்டாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் அரிவாளால் கேக் வெட்டிய பிறந்தநாள் கொண்டாடிய சென்னை மற்றும் சேலத்தில் ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கோவையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ரவுடிகள் சிலர் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். மேலும் சமூக வலைத்தளங்களிலும் புகைப்படங்கள் பரவவிட்டிருந்தனர்.

இதனையடுத்து, புகைப்படத்தை கைப்பற்றிய போலீசாரின் விசாரணையில் புகைப்படத்தில் உள்ள ரவுடிகள் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சிவானந்தபுரத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மீது கோவை மாநகர போலீஸ் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து, சிவானந்தபுரத்தை சேர்ந்த சதீஸ்குமார், சுந்தர் ஆகியோரை கைது செய்தனர்.

 

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்