சென்னை:
சென்னையில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பி.டி.ரமேஷ் போலீசாரால் கைதுசெய்யப்பட்டான்.
சென்னை எண்ணூரில் பிரபல ரவுடி அலெக்சாண்டருக்கும், செந்தில் குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டபோது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் செந்தில்குமார் படுகாயமடைந்துள்ளார்.
செந்தில்குமார் ஸ்டான்லி மருத்தவமனையில் குண்டடிபட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில், துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த பிரபல ரவுடி பி.டீ.ரமேசை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
விசாரணையில் அலெக்சாண்டர் என்ற தனது நண்பர் குடிபோதையில் சுட்டுவிட்டதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கோத்தகிரியில் தலைமறைவாக இருந்த அலெக்சாண்டரும் கைதுசெய்யப்பட்டார்.