பழனி:
பழனி முருகன் கோவிலில், பராமரிப்பு காரணமாக வரும் 12ம் தேதி ரோப் கார் சேவை நிறுத்தப்படுகிறது.
பழனி முருகன் கோவில் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக வரும் 12ம் தேதி (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் நிறுத்தப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்று ஒரு நாள் மட்டும், பக்தர்கள் படிப் பாதை மற்றும் மின் இழுவை ரயில் ஆகியவற்றை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.