மும்பை:
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டி நேற்று மவுண்ட் மவுங்கானு மைத £னத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது தசை பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் இருந்து வெளியேறினார். பின்னர், பீல்டிங் செய்யவும் வரவில்லை.
இந்நிலையில், ரோகித் சர்மாவுக்கு ஏற்பட்ட தசை பிடிப்பு இன்னும் குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளார்.