அதிக ரன்களை குவிக்க திட்டம் – ரோஹித்

  • In Sports
  • May 12, 2019
  • 230 Views
அதிக ரன்களை குவிக்க திட்டம் – ரோஹித்

ஐதராபாத்:

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இண்டியன்ஸ் அணியும் ஐதராபாத்தில் இறுதிப்போட்டியில் மோதி வருகிறது.

இந்நிலையில், மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன், போட்டிக்கு முன் அளித்த பேட்டியில், இது மிகப்பெரிய போட்டி. முதலில் பந்துவீச்சுக்கு மைதானம் சாதகமாக இருக்கலாம். நாங்கள் அதற்கும் தயாராக உள்ளோம். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய விரும்புகிறோம். அதிக ரன்களை இலக்காக அடிக்க நினைக்கிறோம். 5 நாட்கள் ஓய்வை நன்றாக பயன்படுத்தி உள்ளோம். சில வீரர்கள் பயிற்சி எடுத்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது நடந்துவரும் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங்கில் இறங்கிய மும்பை அணி, 8.20 மணி நிலவரப்படி, 11வது ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்