ராஞ்சி:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து விளாசியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுடனான 3 டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. முதலின் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கிது.
இந்த டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடி ரோஹித் சர்மா 4 சிக்சர் மற்றும் 13 பவுண்டரிகளை விளாசி சதம் அடித்துள்ளார். இதனால் டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர் என்ற சாதனையை பெற்றுள்ளார். தொடக்க ஆட்டக்காராக களமிறங்கி தனது 3வது சதத்தை பூர்த்தி செய்தார். 1970களில் கவாஸ்கர் 3 முறை செய்த சாதனையை இம்முறை ரோஹித் சர்மா படைத்திருக்கிறார்.
இந்திய அணி தற்போது வரை 52 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்களை குவித்துள்ளது. ரோஹித் சர்மா 108 ரன்களுடனும், ரகானே 74 ரன்களுடனும் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.