ராபர்ட் பயஸுக்கு பரோல்

  • In Chennai
  • November 21, 2019
  • 186 Views
ராபர்ட் பயஸுக்கு பரோல்

சென்னை:

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகனின் திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாள் பரோல் கேட்டு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், நளினி பின்பற்றிய விதிகளை ராபர்ட் பயஸ் பின்பற்ற வேண்டும் எனக்கூறி அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து, சிறைத்துறையின் சட்ட நடைமுறைகளுக்கு பின், ராபர்ட் பயஸ் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்