ஒசூர்:
ஓசூர் அருகே சாலையில் ஏற்ப்பட்ட குழியால் விபத்து ஏற்ப்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் – பாகலூர் மாநில நெடுஞ்சாலை என்பது பெங்களூருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலைகளில் ஒன்றாகவும் மாநில எல்லையாகவும் இருந்து வருகிறது.
பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவில் அருகில் முக்கிய சாலையிலேயே ஏற்ப்பட்டுள்ள குழியால் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர்.
பொதுமக்கள் நடந்து செல்வதும் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தும் பொதுச்சாலையாகவும் மாநில நெடுஞ்சாலை என்பதால் வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருகின்றனர்.
காவல்துறை சார்பில் குழி அருகே தடுப்பு அமைக்கப்பட்டிருந்தாலும் விபத்து ஏற்ப்படுவதற்கு முன் அதிகாரிகள் விழித்துக்கொண்டு சரிசெய்ய வேண்டுமென்பதே பாகலூர் கிராம மக்களின் கோலிக்கையாக உள்ளது.