சென்னை:
சென்னையில் முக்கிய சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
சென்னையின் முக்கிய இடமான மத்திய கைலாஷ் சந்திப்பில் இன்று காலை திடீரென சாலையின் நடுவே உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.
இதனால், அந்த சாலையில் தடுப்புகளை அமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதேபோல், சென்னையில் கடந்த காலமாக சில இடங்களில் பள்ளம் ஏற்பட்டதும், அதில் வாகனங்கள் சிக்கியதும் குறிப்பிடத்தக்கது.