சாலையை மறித்து சுவர்; பொதுமக்கள் அவதி

சாலையை மறித்து சுவர்; பொதுமக்கள் அவதி

ஒசூர்:

ஓசூர் அருகே லே அவுட் போட்டிக்களில் ஒரு பகுதியினர் பொதுப்பாதையை மறித்து சுற்றுச்சுவர் கட்டியுள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பேகேப்பள்ளி என்னுமிடத்தில் அடுத்தடுத்த இரண்டு லே – அவுட்டுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, அவற்றில் பொதுப்பாதையை காண்பித்தே அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

இதில் ஒருப்பிரிவினர், ஆவணத்தில் காட்டப்பட்ட பொதுப்பாதையை மறித்து சுற்றுசுவர் எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் மடிவாளம், நெல்லூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய பொதுப்பதையும் ஜேசிபி வாகனம் கொண்டு குழித்தோண்டப்பட்டிருப்பதால், குடியிருப்பு வாசிகளும் பொதுமக்களும் சாலையின்றி தவித்து வருகின்றனர்.

பொதுமக்களின் இன்னலைப்போக்க வருவாய்த்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்