சாலை விபத்தில் தம்பதியர் பலி

சாலை விபத்தில் தம்பதியர் பலி

ஒசூர்:

ஒசூரில் நடந்த விபத்தில் கணவன் மனைவி பலியானது உறவினர்களிடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த டி.கொத்தப்பள்ளி கிராமத்தில் உறவினரின் புதுமணை புகுவிழாவில் பங்கேற்க வந்தபோது டிப்பர் லாரி மோதி கணவன் மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜி புரம் பகுதியில் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தவர்கள் முனிகிருஷ்ணா (52) – சந்தோசம்மா (45) தம்பதி. இன்று ஒசூர் அருகே உறவினரின் புதுமனை புகுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்க ஈஜி புராவிலிருந்து இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் இருவரும் வந்தபோது, ஒசூர் அருகே மத்திகிரி கூட்டுரோடு பகுதியில் இருசக்கர வாகனம் – டிப்பர் லாரி நேருக்குநேர் மோதிக்கொண்ட சாலை விபத்தில் கணவன்,மனைவி இருவரும் பரித £பமாக உயிரிழந்தனர், உயிரிழந்த தம்பதிகளின் உடலை மீட்டு பிரேத பரிசே £தனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

ஒசூர் பகுதிகளில் டிப்பர் லாரிகளை அதிகவேகமாக இயக்குவதால் தொடர் விபத்து க்கள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்த வாரத்தில் மட்டுமே டிப்பர் லாரி மோதி 3 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சுப நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் உயிரிழந்த தகவலையடுத்து உறவினர்கள் ஒசூர் அரசு மருத்துவமனையில் குவிந்து கதறி அழுத சம்பவம் மருத்துவமனை வளாகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்