சென்னை:
சினிமா துறையில் அரசியல் வரவேண்டாம் என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் ‘மாஸடர்’ படபிடிப்பு நெய்வேலியில் உள்ள என்எல்சி 2வது சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்யை அழைத்து வருமான வரித்துறையினர் விசாரணை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணைக்குப்பின்னர் விஜய் படபிடிப்பில் கலந்துகொண்டபோது, பா.ஜ.,வினர் பே £ராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு ரசிகர்களால் பதட்டம் நிலவியதால், லேசான தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இந்நிலையில் படப்பிடிப்பில் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையினருடன் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.செல்வமணி, விஜய் நடிக்கும் ‘ம £ஸ்டர்’ படப்பிடிப்பு பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தியதால் தொழிலாளர்கள் பாதி க்கப்பட்டுள்ளனர். திரைப்பட துறையில் பிரச்சனை செய்வது பெப்சி அமைப்பு கண்டிக்கிறது என அவர் தெரிவித்தார்.