ரியோ டி ஜெனிரோ:
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் உள்ள மருத்துவமனையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், பலரைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பிரேசில் ரியோ டி ஜெனிரோ மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில், 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் சிக்கியிருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த மருத்துவமனையில் 103 நோயாளிகளும், 226 ஊழியர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு கடும் புகை கிளம்பி வருவதால், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி தொடந்து நடைபெற்று வருகிறது.