சென்னை:
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்களில் 1,550 பேர் பணிக்கு திரும்பியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நோயாளிகளின் நலன் கருதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் பணிக்க திரும்புமாறு அழைப்பு விடுத்தோம். தண்டிப்பது அரசின் நோக்கமல்ல, அரசு மென்மையான போக்கை கடைபிடிக்கிறது.
நேற்று மட்டும் 4,683 மருத்துவர்கள் பணிக்கு வரவில், அதிலிருந்து 1550 பேர் பணிக்கு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,127 மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். அரசின் வேண்டுகோளை ஏற்று பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு நன்றி என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.