வெள்ளத்தில் சிக்கிய ரயில்: 700 பேரை மீட்டது பேரிடர் குழு!

வெள்ளத்தில் சிக்கிய ரயில்: 700 பேரை மீட்டது பேரிடர் குழு!

பத்லாப்பூர்:

மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்தில் சிக்கிய மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த 700 பேரை தேசிய பேரிடர் மீட்டுக்குழு மீட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பத்லாப்பூர் மற்றும் வாங்கனிக்கு இடையே சுமார் 700 பயணிகளுடன் வந்துகொண்டிருந்த மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் மழை வெள்ளத்தில் நேற்று சிக்கியது. இந்த ரயில் கல்யாண் பகுதியிலிருந்து கோலாப்பூர் வரை இயக்கப்படுகிறது.

மும்பையிலிருந்து 72 கி.மீ. தொலைவில் உள்ள பத்லாப்பூரில் மழை வெள்ளத்தில் ரயில் இயக்கமுடியாமல் நிறுத்தப்பட்டது. சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் சிக்கித் தவித்தனர்.

இவர்களை மீட்க இன்று காலை தேசிய பேரிடர் மீட்டுக்குழுவினரும், இந்திய விமானப்படை ஹெலிகாப்டரும் அங்கு விரைந்தன.

இந்நிலையில், தற்போது அனைத்து பயணிகளையும் அந்த மீட்டுக்குழுவினர் விரைந்து மீட்டுள்ளதாக சென்ட்ரல் ரயில்வே துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகள்

சமீபத்திய செய்திகள்

சிறப்பு வீடியோக்கள்