மும்பை:
ஈரானிலிருந்து இந்தியாவுக்கு வந்த கப்பல் இயந்திர அறையில் தண்ணீர் புகுந்து தத்தளித்த 13 இந்தியர்களை இந்திய கடலோர காவல் படை மீட்டுள்ளது.
ஈரான் நாட்டின் பாஸ்ராவிலிருந்து இந்தியாவின் ஹசிராவுக்கு வந்துகொண்டிருந்த எம்டி., ரீம் டேங்கர் கப்பல், சுமார் 210 நாட்டிகல் மைல் தொலைவில் வந்தபோது இயந்திர அறையில் நீர் புகுந்ததாகவும், கப்பல் மூழ்குவதாகவும் மும்பை கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் வந்தது.
காலை 8.05 மணியளவில் வந்த தகவலையடுத்து, இந்திய கடலோர காவல் படையுடன் ஒருங்கிணைந்து, எம்.வி.கங்கா கப்பல் மூலம், இன்று காலை 11.30 மணியளவில், மூழ்கும் கப்பலிருந்து 13 இந்திய பணியாளர்களை மீட்டுள்ளது.
Maritime Rescue Co-ordination Centre (MRCC) Mumbai on receipt of the distress at 0805 hrs, established contact with both the ship and MRCC Karachi as the position was 90 nautical miles inside Pakistan search and rescue region. https://t.co/U2E4V3YEdO
— ANI (@ANI) January 23, 2020