சென்னை:
மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் தேனி தொகுதி எம்.பி., ரவீந்திரநாத் குமார் ஏமாற்றத்தை சந்தித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து ரவீந்திரநாத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது. எனவே தேவையற்ற கருத்துகளை யாரும் பதவிட வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தங்கள் பகுதியில் உள்ள நிறை குறைகளை தனக்கு தெரியப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளார்.