சென்னை:
சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றுவதற்கான கால அவகாசத்தை மேலும் 3 நாட்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சர்க்கரை அட்டை தாரர்கள் அரிசி அட்டையாக மாற்ற இன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 3 நாட்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக இணையதளமான www.tnpds.gov.in சென்று சர்க்கரை அட்டை தாரர்கள் நவம்பர் 29ம் தேதி வரை விண்ணபிக்கலாம்.