நாமக்கல்:
ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் வழக்கில் 4 பேருக்கு ஜாமீன் வழக்கி நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராசிபுரம் பச்சிளம் குழந்தைகள் விற்பனை வழக்கில், ஓய்வுபெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்ளிட்ட மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜாமீன் கேட்டு நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இந்த மனு மீதான விசாரணையில், செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, இவரின் கணவர் ரவிச்சந்திரன், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், இடைத்தரகர் லீலாவுக்கு ஜாமின் வழங்கி நீதிபதி லதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதற்கு முன் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் இரண்டு முறையும், இடைத்தரகர் லீலா மூன்றாவது முறையாகவும் ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்து.