கொழும்பு:
மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ., பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இதனால், பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இதனைத்தொடர்ந்து மோடி 2வது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
நாடுமுழுவதும் பா.ஜ., தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இலங்கை பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.